கோடாரி பிடியால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
கோடாரிப் பிடியால் தாக்கப்பட்ட இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வடமராட்சி கற்கோவளம் தண்ணீர் பந்தலடிப்பகுதியில் நேற்று 13/01 இரவு 8.30. மணியளவில் இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த 22. வயதுடைய வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞனே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞன் மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் திருமணம் ஆகி இரண்டு வருடங்களாகும்.
சிற்றுண்டி விற்பனை செய்யும் முச்சக்கரவண்டி வாகனத்தை அவருடைய நண்பர் மறித்து றோல்ஸ் கேட்டதாகவும், இதன் போது ஏற்பட்ட தகராறில் உறவினர்களால் இளைஞன் கோடரி பிடியால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment