கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த23/12/2018 அன்று  காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாளையடி வடமராட்சி கிழக்கை சேர்ந்த 46 வயதுடைய அருளானந்தம் ஜோன்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடல் அலை இழுத்து சென்றபோது அருகிலிருந்தவர்களால் காப்பாற்றபட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்